search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் பிரச்சனை"

    சாலிகிராமம் அருகே காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பெண்ணை கொன்ற வாலிபருக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
    போரூர்:

    சென்னை, சாலிகிராமம் முனுசாமி தெருவில் வசித்து வந்தவர் ரமா (வயது 40). கடந்த 2009-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகே கோவில்பட்டியை அடுத்த மேலநாலந்தனம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (20) தங்கி கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது ரமா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற தோழி ஒருவரது மகளான பள்ளி மாணவியை செந்தில்குமார் காதலித்து தொல்லை கொடுத்தார். இதனை ரமா கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ரமாவை கழுத்தை அறுத்து கொன்றார்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

    விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றவாளி செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    வந்தவாசியில் காதலிக்கு திருமணம் நடந்த மண்டபம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    சென்னை பெருங்கொளத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்துரு (வயது 28). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த (27) வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இளம் பெண்ணிற்கு வந்தவாசியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.

    கடந்த 2-ந்தேதி வந்தவாசியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது.

    காதலிக்கு திருமணம் நடைபெறும் தகவல் சந்துருவுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த சந்துரு வந்தவாசிக்கு சென்றார். அங்கு காதலிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபம் முன்பு உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×